Date:

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L மற்றும் P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், CC வலயங்களில், காலை 6 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணிமுதல் காலை 8.30 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு இடம்பெறுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...