Date:

ஊரடங்கு தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விடுத்த முக்கிய செய்தி

நாட்டில் இன்று மாலை ஐந்து மணியுடன் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று மாலை ஐந்து மணியுடன் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஊரடங்கு உத்தரவானது அமுல்படுத்தப்படவேண்டுமாயின் ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே நாங்கள் பொது மக்களுக்கு அறிவிப்போம்.

ஆகையினால் பொது மக்கள் ஊரடங்கு உத்தரவு விடயத்தில் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என நிச்சயமாக கூற முடியாது என தெரிவித்த அவர், பிறப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவினை அமுல்படுத்த நேரிடும் எனவும் கூறினார்.

இதேவேளை, நேற்று நண்பகல் 12 மணியுடன் அமுலாகும் வகையில் பிறப்பிப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 5 மணியுடன் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...