பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ரக்னா அரக்ஸனா லங்கா லிமிடெட் நிறுவனத்தை ஜூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கான வர்த்தமானி, பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் நிறுவனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.