Date:

இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது

இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றது எனவும் தேவையான இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதும் குழப்பகரமானதுமாக காணப்படுகின்றது.

நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போதே நிலைமை மாறியவண்ணமுள்ளது, என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் எங்கள் அயலவர்கள் என்பதால் நாங்கள் அவர்களிற்கு உதவுவதற்கான அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம், அவர்கள் மிகவும் நட்புணர்வு மிக்கவர்கள் அவர்கள் மிகவும் கடினமான நிலையில் உள்ளதால் நாங்கள் அவர்களிற்கு உதவ விரும்புகின்றோம்.

கடந்த சில மாதங்களாக அந்த நாட்டிற்கு நாங்கள் மிகுந்த ஆதரவாக இருந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் கவனம் இலங்கையின் பொருளாதார நிலை குறித்தும் எவ்வாறு உதவலாம் என்பது குறித்துமே காணப்படுகின்றது.

நாங்கள் ஏனைய விடயங்களில் ஈடுபடவில்லை, நாங்கள் பொருளாதார விடயங்கள் குறித்து மாத்திரமே கவனம் செலுத்துகின்றோம் ஏனைய விடயங்கள் குறித்து கரிசனை கொள்ளவில்லை, சமூக ஊடகங்களில் வெளியாகும் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிக்கமுடியாது எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...