Date:

இரண்டு நபர்களை பாதுகாப்பதற்குப் பதிலாக இரண்டு கோடி மக்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்- சஜித்

இரண்டு நபர்களை பாதுகாப்பதற்குப் பதிலாக நாட்டின் இரண்டு கோடி மக்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைவரும் ஜனநாயகத்துக்க மதிப்பளித்து செயற்படுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் போராட்டத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு தாம் அனைத்து பாதுகாப்புப் பிரிவினரையும் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயகத்தை சீரழித்து மக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ள அவர்,ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவல்களை அரசு வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் அமைதியாக ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து செயற்படுமாறு தாம் நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...