Date:

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி மாத்தளையிலும் போராட்டம் (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக மாத்தளை மாவட்டத்தின் கந்தேனுவரை பிரதேசத்திலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விழித்தெழு தோழா அமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் தம்பலகல, சின்ன செல்வகந்த, பெரிய செல்வகந்த, பிட்டகந்த, கந்தேனுவர மற்றும் உனுகலை கிராமங்கசை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டிந்தனர்.

இதன்போது, ஹிசாலினிக்கு நேர்மையான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு, இலங்கையில் இனிவரும் காலங்களில் இவ்வாறு சிறுமிகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...