Date:

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி மாத்தளையிலும் போராட்டம் (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக மாத்தளை மாவட்டத்தின் கந்தேனுவரை பிரதேசத்திலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விழித்தெழு தோழா அமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் தம்பலகல, சின்ன செல்வகந்த, பெரிய செல்வகந்த, பிட்டகந்த, கந்தேனுவர மற்றும் உனுகலை கிராமங்கசை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டிந்தனர்.

இதன்போது, ஹிசாலினிக்கு நேர்மையான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு, இலங்கையில் இனிவரும் காலங்களில் இவ்வாறு சிறுமிகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல்...

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...