Date:

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி மாத்தளையிலும் போராட்டம் (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக மாத்தளை மாவட்டத்தின் கந்தேனுவரை பிரதேசத்திலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விழித்தெழு தோழா அமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் தம்பலகல, சின்ன செல்வகந்த, பெரிய செல்வகந்த, பிட்டகந்த, கந்தேனுவர மற்றும் உனுகலை கிராமங்கசை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டிந்தனர்.

இதன்போது, ஹிசாலினிக்கு நேர்மையான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு, இலங்கையில் இனிவரும் காலங்களில் இவ்வாறு சிறுமிகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும்...

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

    Dubai International Airport அருகே ஈரானிய ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்...

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...