Date:

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி மாத்தளையிலும் போராட்டம் (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக மாத்தளை மாவட்டத்தின் கந்தேனுவரை பிரதேசத்திலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விழித்தெழு தோழா அமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் தம்பலகல, சின்ன செல்வகந்த, பெரிய செல்வகந்த, பிட்டகந்த, கந்தேனுவர மற்றும் உனுகலை கிராமங்கசை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டிந்தனர்.

இதன்போது, ஹிசாலினிக்கு நேர்மையான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு, இலங்கையில் இனிவரும் காலங்களில் இவ்வாறு சிறுமிகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பணவீக்கம் அதிகரிப்பு

புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேசிய...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...