Date:

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்கவும், பொது மக்களுக்கு இடையூறாக செயற்படுவதற்கு பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை – ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தயாராக இருப்பதாக நம்பப்படுவதால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, புதுக்கடை நீதிமன்றம் இந்த தடை உத்தரவை விதித்துள்ளது.

இதன்படி, ‘சுரகிமு லங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வண. பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் வண. உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசத் அறக்கட்டளையின் ஸ்தாபகர் களுபோவில பதும தேரர் ஆகியோருக்கு மேற்படி இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...