Date:

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் மூலம் நாட்டின் பிரச்சினை தீரப்போவதில்லை- விமல்

நாடு நாள் தோறும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், சர்வகட்சி நிர்வாகம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

இதனை விடுத்து தேவையற்ற பிரச்சினைகளை பாராளுமன்றில் விவாதிப்பதில் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

தேர்தலில் தோல்வியடைந்து, தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் மூலம் நாட்டின் பிரச்சினை தீரப்போவதில்லை. தற்போதைய நிர்வாகத்தினால் சர்வதேச நம்பிக்கையை வெற்றிக்கொள்ளமுடியவில்லை. எனவே, உடனடியாக சர்வகட்சி நிர்வாகத்துக்கு செல்லவேண்டும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

விமல் வீரவன்சவின் இந்தக்கருத்துக்களை எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஆமோதித்து கருத்துக்களை வெளியிட்டார். மகா சங்கத்தினரும் சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்த கருத்துக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது எதிர்ப்பை வெளியிட்டார். சர்வகட்சியை அமைக்க எதிர்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அதனை எதிர்கட்சி தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார்...

NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco...

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி...

மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்...