Date:

மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொலை செய்த தாய் மற்றும் மகன்

தந்தையொருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியினால் தாக்கி கொலைசெய்த கொடூர சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் 33 வயதான மனைவியும் அவரது 17 வயதான மகனுமே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை துன்புறுத்தியதே கொலைக்கான காரணம் என சந்தேக நபரான மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மனைவி கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்த கொலையை செய்து, மகனுடன் சேர்ந்து சடலத்தை காட்டில் வீசிவிட்டு பொலிஸ் நிலையத்தில் தனது கணவனைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...