Date:

இலங்கைக்கு உதவ ஜப்பான் உறுதி

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, உறுதியளித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே தூதுவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அபிவிருத்தியை நோக்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாகவும் இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையுடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை ஜப்பான் தொடர்ந்து பேணும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல ஆண்டுகளாக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...