Date:

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதனம் கேப்ரியஸஸ் தெரிவித்துள்ளார்.

BA – 4, BA – 5 ஆகிய புதிய கொவிட் வைரஸ் திரிபுகள் தற்போது மக்கள் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் 20 சதவீதமாக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் திரிபுகளுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, உலக நாடுகள் தமது சனத்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வர வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிப்பாளர் நாயகம் அதனம் கேப்ரியஸஸ்  கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின் நிலைத்தன்மை முயற்சிகளைப் பாராட்டிய MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி...

கொழும்பு மாநகரை தூய கரங்களில் ஒப்படையுங்கள் – பிரதமர் ஹரிணி அழைப்பு

மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373