நீர்கொழும்பு தெல்வத்தை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்ற நபரிடம் பெற்றோல் தேவையா எனக் கேட்டு சிறுநீரை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ள சம்பவம் பதிவாகி உள்ளது..
சந்தேக நபரிடம் மோட்டார் சைக்கிள் சாரதி 5000 ரூபாய் தாளை கொடுத்துவிட்டு எரிபொருளை பெற்றுக்கொண்டு, மீதி நான்காயிரம் பணத்தை பெற அவர் பின்னால் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் இடையில் நின்றுள்ளது.
இதன் போது சிறுநீருடன் சிறிதளவு பெற்றோல் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட நபர் மொத்தமாக ஐயாயிரம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.