மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மரக்கறி சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை காரணமாக பிறமாகாணங்களிலிருந்து பேலியகொடை மத்திய மரக்கறி சந்தைக்கு வர்த்தகர்கள் வருகை தராமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் போஞ்ச் தற்பொழுது 280 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் கரட், 150 ரூபாய்க்கும், பீட்ரூட் 200 ரூபாய்க்கும் கோவா 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.