நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு பதிவாளர் திணைக்களத்தின் சேவைகளை இரண்டு தினங்களுக்கு மாத்திரம் மட்டுப்படத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரம் சேவைகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தினங்களில் முற்பகல் 8.30 முதல் மாலை 4.30 வரை பொது மக்களுக்கான சேவைகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
பிராந்திய மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.