70 வயதான முதியவர் ஒருவர் 6 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்தால் அதனை செய்தியாக வெளியிட வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாக இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிப்பதன் மூலம் நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.