முப்படையினரால் எரிபொருள் டோக்கன் வழங்கப்படுவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாஓதுன்ன இன்று (27) பிற்பகல் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவைப்படும் உண்மையான நபர்களுக்கு ‘டோக்கன்’ கிடைக்காது என்று கூறிய அவர், எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்று நேரத்தைச் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என்றார்.
வரிசையில் நிற்கும் மக்களுக்கு எந்தவித நடைமுறையும் இன்றி ‘டோக்கன்’ வழங்கப்பட்டு பின்னர் வேறு நிரப்பு நிலையத்திற்குச் சென்றும் அதைப் பெற்றுக்கொள்வர்.
கும்பல்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெற்றோல் நிலையங்களில் அந்த ‘டோக்கன்’ கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.