Date:

அக்குரஸ்ஸ பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வளா கங்கையில் வீசியுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்தோடு சம்மந்தப்பட்ட நபர், கொல்லப்பட்ட நபரின் வீட்டுக்கு அண்மையில் வசித்துவருபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொதுமன்னிப்பு சர்ச்சை;ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள...

மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம்; வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு,...

ரில்வினுக்கும் சீனா மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கும், சீனாவின் ஜெஜியாங்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்க்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373