மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு சென்ற மாத்தறை பிரதேச செயலாளர் கௌசல்ய குமாரிக்கு சிகிச்சை வழங்காமல் தடுத்து வைத்திருந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாத்தறை பிரதேச செயலக ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வைத்தியாலைக்கு சிகிச்சைக்காக சென்ற மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பேரணியாக சென்ற ஊழியர்கள், இந்த பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குமாறு மாத்தறை அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி மாத்தறை பிரதான அரசாங்க அதிபர் வை.விக்ரமரசிறியை சந்திப்பதற்கு பல பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.