Date:

தமிழகத்தின் மனிதாபிமான உதவிப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட குறித்த கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இக்கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள், மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்தியாவினால் வழங்கப்பட்ட முதல் தொகுதி மனிதாபிமான உதவிகள் கடந்த மே 18 ஆம் திகதி கிடைந்திருந்த நிலையில், இன்றைய தினம் இரண்டாம் கட்ட உதவிப் பொருட்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்திலிருந்து வருகைதந்துள்ள இக்கப்பலில் சுமார் 15,000 மெட்ரிக் டன் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளதாக உயர்ஸ்தானிகராலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவிகள் தொடரும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...

’’ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார்’’-இஸ்ரேல்

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத்...

திடீரென நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி! எதிர்க்கட்சி அதிரடியாக வெளிநடப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி...

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

மதுரங்குளிய விருதோடை பகுதியில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஒரு...