கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதும், அவர்களில் 70 ஆயிரம் பேர் மாத்திரம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தொகையானது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20 வீததிற்கு குறைவாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு ஒரு நாள் சேவை ஊடாக ஆயிரம் கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.