நாடளாவிய ரீதியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள்
ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் வர்த்தக வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காலை வேளைகளில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், M, N, O, X, Y மற்றும் Z ஆகிய வலயங்களில் 3 மணித்தியாலங்களும், CC வலயங்களில் 2 மணித்தியாலமும் காலை வேளைகளில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.