Date:

நிதி திருத்த சட்டவரைபிற்கு எதிரான மனு மீதான விசாரணை

நிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த நிதி திருத்த சட்டவரைபு சட்டமாக மாற்றப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் கொட்டகொட விதானகே தாக்கல் செய்த இந்த மனு, இன்று முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, குமதின விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த விசாரணை இடம்பெறவுள்ளது.

குறித்த நிதி திருத்த சட்டவரைபு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு...

தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சி…

உலகத் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச...

ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம்…

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற...

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் ஆட்டநிர்ணய சர்ச்சை!

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் மற்றும் ஊழல் இடம்பெறுவதாக சுமத்தப்பட்ட...