Date:

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

வவுனியா-நொச்சுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர், தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த திசையில் பயணித்த கார் இவர்களது மோட்டார் சைக்கிளை மோதியதில் 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபர் பலியானதுடன் மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தினை அறிந்து குறித்த காரினை கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஓமுந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...

Breaking பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில்...

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின்...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார்...