நாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்வரும் வாரங்களில் குறைய வாய்ப்புள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மரக்கறிகளின் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.