இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இன்று மீண்டும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இன்று முற்பகல் 11.00 மணிக்கு கோப் குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கோப் குழுவிற்கு வழங்கிய அறிக்கையை மீளப்பெறுவது தொடர்பில் அவர் சமர்ப்பித்த கடிதம் அண்மையில் கோப் குழுவில் அறிக்கையிடப்பட்டது.
இதனையடுத்து குறித்த கடிதத்தினை மீள்பரிசீலனை செய்து சாட்சியத்தின் ஒரு பகுதியை நீக்குவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கோப் குழு தீர்மானித்துள்ளது.