Date:

கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று 8 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று (22) 8 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

அக்காலப்பகுதியில், கம்பஹா நகரம், கம்பஹா மிரிஸ்வத்த வீதியில் ஹன்சகிரி வீதி வரையான பகுதி, யக்கல வீதியில் ஹன்சகிரி வீதி வரையான பகுதி, ஒருதொட்ட வீதியில் களு பாலம வரையிலான பகுதி, உடுகம்பொல வீதியில் சதொசவுக்கு அருகில் உள்ள பாலம் பகுதி மற்றும் ஜா-எல வீதியில் உள்ள புகை பரிசோதனை நிலையம் வரையான பகுதியிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் குழாய் அமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக...

நுவரெலியா அஞ்சல் கட்டிடம்: அமைச்சரவை தீர்மானம் இரத்து

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு 2024.04.29...

துஷார உபுல்தெனியவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்...

ஜூலை 09 : அனைத்து பாடசாலைகளிலும் விசேட வேலைத் திட்டம்!

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதியை  பிரகடனப்படுத்தி...