Date:

எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தலைக்கவசமொன்றை தீ மூட்டி வீசிய சம்பவம்

தலைக்கவசமொன்றை தீ மூட்டி, அதனை எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசிய சம்பவமொன்று கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிலைய ஊழியர்களும் விரைந்து செயற்பட்டு தலைக்கவசத்தில் இருந்த தீயை அணைத்தனர்.

இதனால், அங்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததன் பின்னர், மக்களுக்கு விநியோகிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பைன் மரங்கள் விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிப்பு

இன்று (27) காலை தெமோதர மற்றும் எல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான...

பாலஸ்தீனுக்கு கை கொடுக்கும் சவுதி

சவுதி அரேபிய அரசினால் பலஸ்தீன மக்களுக்காக 2025 ஆம் ஆண்டிற்கான உதவித்...

’ஈரான் உடனான போரில் அமெரிக்கா சாதிக்கவில்லை’

இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும்...

போதைப் பொருள் வழக்கு : மேலும் ஒரு சூப்பர் நடிகர் கைது!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில்,...