Date:

சீனி விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்-சீனி இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனி கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் சர்வதேச சந்தைக்கு சீனி உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டமை காரணமாகவே சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

யுக்ரேன் உள்ளிட்ட மேலும் சில நெருக்கடிகள் காரணமாக இந்தியாவினால் சீனி, தானியங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பங்களாதேஷ், மியன்மார், மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகள் ராஜதந்திர ரீதியாக மேற்கொண்ட தலையீட்டு காரணமாக இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக தலையீடு செய்து சீனிக்கான இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

அத்தகைய நடவடிக்கை எடுக்காவிடின் சந்தையில் சீனிக்கான விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நான் ஏன் விளையாடவில்லை

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன்...

ஓரினச்சேர்க்கை விவகாரம்: மறுத்தார் நீதியமைச்சர்

இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித...

சட்டவிரோத இறக்குமதி : சிக்கிய இரண்டு சொகுசு வாகனங்கள்!

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய நண்பரால் சட்டவிரோதமாக...

பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடவறை மற்றும்...