Date:

குழப்பநிலையை ஏற்படுத்தினால் எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும்- கஞ்சன விஜேசேகர

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களைக் கோரியுள்ளார் . கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார் .

எதிர்வரும் சில நாட்களுக்கு வீதியை இடைமறித்து எந்தவொரு இடத்திலேனும் குழப்பநிலையை ஏற்படுத்தினால் ,அதாவது எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களைத் தாக்கினால் . அன்றைய தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார் . சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின்மூலம் , தற்போது நாளொன்றுக்கு 350 மெற்றிக் தொன் லீற்றர் பெற்றோல் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எரிபொருள் சுத்திகரிப்பின் மூலம் நாளொன்றுக்கு 600 மெற்றிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...