தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகப்படுவதால் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது .
கடந்த 14 ம் திகதி தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை , மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . எவ்வாறாயினும் , குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு சிலிண்டர்களுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது .
அடுத்த எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய குறைந்தது இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமென லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .