Date:

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு

பாணந்துறை, வெகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டிக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் வரிசையில் நின்ற கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

உயிரிழந்தவர் 53 வயதான ஹிரன பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மகன் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அதே இடத்தில் வரிசையில் நின்ற நிலையில் பின்னர் தனது தந்தை இருந்த இடத்திற்கு வந்து மிகவும் உணர்ச்சிவசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...