Date:

மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக 7 நாடுகளின் குழு கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக அமையப்பெற்ற 7 நாடுகளின் குழு கலந்துரையாடலில் மே மாதம் 9ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது மாநாட்டில் இந்த குழுவின் சார்பாக அறிக்கை ஒன்றை வாசித்த, பிரித்தானியாவின் பிரதிநிதி ரிட்டா ஃப்ரென்ச், இலங்கை அண்மைக்காலமாக முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை அறிந்திருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையின் போராட்டங்கள், ஒன்று கூடல்கள் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமையும் வரவேற்கப்படுகிறது.

ஆனால் நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி அமைதி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணைநடத்தப்பட்டு, தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.

அத்துடன் நீண்டகாலமாக இலங்கையில் நிலவுகின்ற தண்டனைகளில் இருந்து தப்புகின்ற நிலைமை மற்றும் ஊழல்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப்...

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...