இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று(14) விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் பிரதான நடவடிக்கைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன கூறியுள்ளார்.