Date:

யாலபோவ- வெல்லவாய பகுதியில் கோர விபத்து: ஒருவர் பலி

யாலபோவ- வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய – தணமல்வில வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனமல்வில பகுதியை நோக்கிப் பயணித்த சைக்கிள் வலப்பக்க குறுக்கு வீதிக்கு திரும்ப முற்பட்டுள்ளது.

இதன்போது எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த நபர் கலமொட ஆர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் வெல்லவாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...