Date:

முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

இன்றைய பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டே புதிய வீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அணியின் செயல்திறனின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டித்தன்மை சிறப்பாக இருக்கும் எனவும் இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய குழாமில் உள்ள 11 வீரர்கள், நூறுக்கு மேற்பட்ட ரி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்களாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு...

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள்...

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...