Date:

முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று(25) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும் என இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

இன்றைய பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டே புதிய வீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அணியின் செயல்திறனின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டித்தன்மை சிறப்பாக இருக்கும் எனவும் இந்திய அணியின் தலைவர் ஷிக்கா தவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய குழாமில் உள்ள 11 வீரர்கள், நூறுக்கு மேற்பட்ட ரி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்களாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது,...

களனி கங்கையின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டம் வரை குறைந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக...

“பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் மாற்றமில்லை”

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என...

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும்...