Date:

களுவாஞ்சிகுடி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி – வெல்லாவெளி வீதி ஓரத்தின் பட்டிருப்பு பாலத்தை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஓடையொன்றில் இருந்து இன்று (12) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி கிராமத்தின் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய பேரின்பராசா பிரதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர் செலுத்திச் சென்றதாக கருதப்படும் துவிச்சக்கர வண்டியையும் பொலிஸார் அவ்விடத்திலிருந்து மீட்டுள்ளனர்.

குறித்த நபர் நேற்றிரவு களுவாஞ்சிகுடியிலிருந்து கோவில்போரதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு துவிச்சக்கர வண்டியில் சென்றவர் எனவும், அவர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர் எனவும் அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில களுவாஞ்சிகுடி – வெல்லாவெளி பிரதான வீதியோரத்தில் அமைந்துதள்ள ஓடையொன்றில் ஒருவர் வீழ்ந்து கிடைப்பதாக அறிந்த களுவாஞ்விகுடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பி.பிறேமநாத் அவர்களின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...