Date:

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டும்- இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம்

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் எரிபொருள் கிடைத்த பின்னரே பணம் செலுத்தப்பட்டதாக  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், முற்பணம் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யும் போது காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்ற நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 400 எரிபொருள் நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும், முற்பணம் செலுத்தும் நிலையில் மேலதிகமாக உள்ள எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென அவர்கள் கூறுகின்றனர்.

இதனால், விநியோக நடவடிக்கைகள் சிக்கலடையும் நிலைமை காணப்படுவதாக இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...