Date:

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டும்- இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம்

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் எரிபொருள் கிடைத்த பின்னரே பணம் செலுத்தப்பட்டதாக  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், முற்பணம் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யும் போது காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்ற நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 400 எரிபொருள் நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும், முற்பணம் செலுத்தும் நிலையில் மேலதிகமாக உள்ள எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென அவர்கள் கூறுகின்றனர்.

இதனால், விநியோக நடவடிக்கைகள் சிக்கலடையும் நிலைமை காணப்படுவதாக இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...