Date:

நாட்டின் 22வீதம் பேருக்கு உணவு உதவி தேவைப்படும்

இலங்கையர்களில் 22 வீதம் அல்லது 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை பல காரணிகள் பாதித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இரசாயன உரங்கள் இன்மையால் விளைச்சல் 40 தொடக்கம் 50 வீதம் வரை குறைந்தமையே இதற்கு முக்கிய காரணம் என இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உலக உணவுத் திட்டத்தின் பிரதானி, விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் உலக உணவுத் திட்ட பிரதானியுடன் தாம் கலந்துரையாடியதாக, ட்விட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தாம் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும், பிரதமர் கூறியுள்ளார்.

அதேநேரம், உலக உணவுத் திட்டத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது பாராட்டு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும்...

பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு...

தபால் மூல வாக்குகள் பதிவு இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக...

பாணந்துறையில் துப்பாக்கி சூடு ஒரு பலி

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373