Date:

பாகிஸ்தான் தூதுவராலயத்தினால்; உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினரால் மேலும் ஒரு தொகை உலர் உணவு பொதிகள் கொழும்பு வாழ் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தினால் மூவினத்தையும் சேர்ந்த சுமார் 200 பயனாளிகளுக்கு பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு கொழும்பு மாளிகாவத்தை பிரதிப மண்டபத்தில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் பர்கி கலந்து கொண்டதுடன் தூதரகத்தின் ஊடக இணைப்பாளர் குசும் ஹைஸர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய ஏழை மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை தூதுவரினால் வழங்கி வைக்கப்பட்டது. பிரதம அதிதியாக தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் பர்கி இவ்வாறு கருத்து தெரிவித்தார். ‘இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் நீண்டகால உறவு உள்ளது. இலங்கைக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராகவுள்ளோம். ஸகாத் ஸதகா போன்ற உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்க இஸ்லாம் மாதம் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. ஆதனால் வசதியுள்ளோர் வசதி அற்றோருக்கு இவ்வாறானா காலப்பகுதியில் உதவிகளை வழங்குவது சிறந்தது.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373