அக்கரைப்பற்று – பள்ளக்காடு பகுதியில் காட்டு யானை தாக்கி 04 மாத குழந்தையொன்று உயிரிழந்த துர்ப்பாக்கிய சம்பவம் நேற்று(08) பதிவாகியுள்ளது.
பள்ளக்காடு பகுதியில் நேற்று(08) மாலை 5 மணியளவில் பெற்றோர் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த குழந்தையின் தாயார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.