Date:

சுகாதார பிரிவில் இருந்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மருந்துகளுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான மருந்து விநியோகம் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னரே சீராகும் என்றும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை மட்டுமே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...