Date:

சுகாதார பிரிவில் இருந்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மருந்துகளுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான மருந்து விநியோகம் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னரே சீராகும் என்றும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை மட்டுமே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள்...

செம்மணியில் நேற்று 3 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 3...

இலங்கை மீதான வரியை 20 % ஆக குறைத்த டிரம்ப்

2025 ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும்...