Date:

எரிபொருள் தட்டுப்பாடு- தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பொதுப் போக்குவரத்து சேவைகள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை வாகனங்கள் என்பன உரிய முறையில் போக்குவரத்தில் ஈடுபடவில்லை.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்கள் வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுகின்றன.

நேற்றிரவு(07) வரை பல தனியார் பஸ்கள், எரிபொருள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றும்(08) குறைந்தளவு பஸ்களே சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...