Date:

லொறியொன்று வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலில் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (04) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து தம்புள்ளை பகுதிக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றினையும் மோதி வீடொன்றினுள் புகுந்துள்ளதாகவும் இதனால் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் நித்திரை கலக்கமும், அதிக வேகமுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373