Date:

கொழும்பில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று (04) கொழும்பு – புகையிரத நிலையத்தில் இடம்பெற்று வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் இன்றைய தினம் நுழைவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் பலர் ஒன்றிணைந்து இன்று கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கொழும்பு – காலிமுகத்திடலில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டமானது இன்றுடன் 57வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...