நாளை (04) சனிக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 5 மணிவரை இவ்வாறு நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
எத்துல்கோட்டே, பத்தேகம, மிரிஹானை, மாதிவெல, உடஹாமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட-விஜேராம ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.