Date:

விபத்தில் தாயும் மகளும் பலி:தந்தையும் மகனும் படுகாயம்

அனுராதபுரம் கவரக்குளம் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி கால்வாய் ஒன்றுக்குள் புரண்டு விழுந்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பல் நடந்த இந்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் தம்புள்ளையில் இருந்த அனுராதபுரம் நோக்கி சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி கால்வாய்க்குள் விழுந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பமையும் சம்பவம் குறித்து கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...