Date:

சீரற்ற காலநிலையினால் ஒருவர் பலி

 

இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிவாரண சேவை அதிகாரி ஒருவர், அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு உள்பட்ட 144 குடும்பங்களைச் சேரந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

236 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக, பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட மக்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் அவர் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 13 நிவாரணக்குழுக்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அந்த நிவாரணக் குழுக்கள் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...