Date:

சீரற்ற காலநிலையினால் ஒருவர் பலி

 

இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிவாரண சேவை அதிகாரி ஒருவர், அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு உள்பட்ட 144 குடும்பங்களைச் சேரந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

236 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக, பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட மக்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் அவர் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 13 நிவாரணக்குழுக்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அந்த நிவாரணக் குழுக்கள் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...