Date:

வாகனத்தில் திடீரென சுகயீனமுற்று இருவர் உயிரிழப்பு; போதைப்பொருளே காரணம்

வாகனத்தில் பயணித்த நால்வர் திடீரென சுகவீனமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று அதிகாலை மன்னார், உயிலங்குளம் பகுதியில் பயணித்த குழுவினர் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் தலைமன்னார் மற்றும் பேசாலை பகுதியைச் சேர்ந்த 26 வயது மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், மன்னார் நீதவான் நீதிமன்றில்  முன்வைத்த பொலிஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி (JMO) தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் தேவையான சிகிச்சைக்கு பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...