Date:

உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொலை; பணிபுரியும் ஊழியர்கள் மூவர் மாயம்

தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண் தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 29ஆம் திகதி இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணிடம் இருந்த மூன்று தங்க சங்கிலி, மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என்பதோடு, மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூவர் காணாமல் போனமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...