Date:

குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிப்பதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் வரவு செலவுத் திட்ட சலுகை சேவைகள் மற்றும் திடீர் தேவைகளின் பொறுப்பு கருத்திட்டத்தின் கீழ், பில்லியன் ரூபா நிதியை பெற்றுக் கொள்வதற்காக  குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிப்பதற்காக பிரதமரினால் அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டது.பாராளுமன்றத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள அழுத்தங்களை குறைக்கும் நோக்கில் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டின்ஆரம்பத்தில் அரசாங்கத்தினால் நிவாரணப் பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

 

அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும் அத்தியாவசிய அரச சேவைகளை தடைகளின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...